Thursday, July 21, 2011

இறந்தவர்களில் யாரை வழிபட வேண்டும்

பேய்

இறந்து போன அனைவரும் பேயாக மாறுவது கிடையாது.

அகால மரணமடைந்தவர்களே அவரவர் தகுதிகேற்ற நிலைகளை அடைகின்றனர்.

தீராத ஆசைகள், ஏக்கங்கள் , தீராத பலி போன்றவற்றுடன் இறப்பவர்களே பேய்களாக பூமியில் திரிந்து தங்கள் என்னங்களை

நிறைவேற்றி கொள்ளத்துடிப்பார்கள். எனவே விபத்து, தற்கொலை,ஆகியவற்றால் இறந்தவர்களை வழிபடுதல் கூடாது

அவர்களை வழிபடுவதால் ஆபத்து நேரக்கூடும்.


ஆவி

நல்ல எண்ணங்களுடன் வாழ்ந்தவர்கள்,சமுதாய நலத்திற்காக இறந்தவர்கள் பொது நலத்திற்காக தன் உயிரை இழந்தவர்கள்

நற்கதி அடைந்து புண்ணிய ஆத்மாக்களாக வழிபாட்டுக்குரியவர்களாக திகழ்கிறார்கள்.எனவே யாரை வழிபடவேண்டும் என்பதை

அறிந்து அவர்களை நாம் வழிபடுதல் வேண்டும்